Google+ balakuamaran novels | எழுத்தாளர் பாலகுமாரன் சிந்தனைகள் | Balakumaran Thoughts | Balakumaran Books

Pages

Thoughts and Quotes

Writer balakumaran thoughts and quotes

Labels

Showing posts with label balakuamaran novels. Show all posts
Showing posts with label balakuamaran novels. Show all posts

Thursday, July 17, 2014

Best Ways to Overcome Laziness - Balakumaran

பாலகுமாரன் சிந்தனைகள் 


சோம்பலை எதிர்க்க வழி ? 

குறைவாக உண்ணுதல். அரை வயிறு உணவு பசியை அடக்கும். உறக்கம் வரவழைக்காது. உறங்கும் போது உறக்கத்தை விரும்பாமல் எழுந்திருந்தும் செய்ய வேண்டிய வேலைகளை நினைத்து கொண்டு தூங்குவது நலம்.

தூக்கம் கலைந்த பிறகு தூக்கம் தொடருவது பேராபத்து. கொஞ்சம் நேரம் தூங்குகிறேன் என்று சொல்வது கேவலம். மூளையிலிருந்து   உறக்கம் கலைந்த மறுநிமிடம் எழுந்து விட வேண்டும். பல் தேய்க்க நீர்பட்டவுடன் புத்தி சுறுசுறுப்பாகி விட வேண்டும். முதல் வேலையான பல் தேய்த்தலை முழு முனைப்போடு செய்ய வேண்டும்.

மூளையில் அலட்டல் மிச்சமிருக்கிறது. அந்த அலட்டல் கனவாக உங்களை அலைகழிக்கும். நல்ல தூக்கம் இல்லாது போகும். பேச்சுக் குறைந்தால் நன்கு தூங்கலாம். நல்ல தூக்கம் நாலு மணி நேரம் போதும்.

விடியலில் எழுந்திருத்தல், புத்திக்கு பலம் கொடுக்கும்.

பொழுது போக்கு என்பதே பிழைப்புக்கான வேலையாக இருந்தால் அதாவது வேலையே பொழுது போக்காக இருந்தால் வெற்றி நிச்சயம்.

வெற்றி வேண்டுமெனில் சோம்பலை உதறுங்கள். 

Friday, June 27, 2014

கண்ணால் கண்ட காதற் கதைகள் - பாலகுமாரன்(Balakumaran Love Thoughts)

கண்ணால் கண்ட காதற் கதைகள் - பாலகுமாரன்(Balakumaran Love Thoughts)

காதல் என்பது ஒரு போதையில்லை. அபகரித்து ஆளுகின்ற போரில்லை. நாலு பேர் பொறமை படுகின்ற வெற்று கம்பீரமல்ல. காதல் என்பது தெளிவு.

காதல் என்பது மற்றவரோடு பேசிப்பழகி புரிந்து கொள்கின்ற தன்மையை கொண்டு வந்து கொடுப்பது.

அவர்கள் காதல் காதல் என்று சொல்லவில்லை கொஞ்சும் மொழிகள் பேசவில்லை. அவர்கள் உழைப்பைக் காதலித்தார்கள். ஒருவருக்கொருவர் உண்மையாய் இருந்தார்கள் மிக எளிதாய் உயர்ந்தார்கள்.

காதல் என்பது வாய் குழரி பேசுவதல்ல. கண் கிறங்கபடுவதல்ல. சிலசமயம் அருகருகே நின்று உழைப்பது கூட காதல் தான். ஒருவரையொருவர் பாராட்டி உற்சாகபடுத்தவது கூட காதல் தான்..

Sunday, June 22, 2014

குரு என்பவர் ஒருவருக்கு அவசியமா ? ( Guru Enbavar Oruvaruku avasiyama ? )


ஐயா, குரு என்பவர் ஒருவருக்கு அவசியமா ?



பாலகுமாரன்: உலகில் ஒவ்வொரு உயிரினமும் தன் வாழ்க்கைப் பற்றிய அறிவை தன் சக உயிரினங்களிடமிருந்து தான் பெறுகின்றது. உடை உடுத்தலை, உண்ணுதலை, உறங்குதலை, கூடிப்புணர்தலை, இயற்கை உந்துதல் கொடுத்தாலும் அது சக உயிரினங்கள் சொல்லிக் கொடுக்க, அந்த அனுபவத்தை கிரஹித்துக் கொண்டு இன்னும் சீராக வாழ்கிறது. இந்த சீரான வாழ்க்கைக்கு நாகரீகம் என்று பெயர்.



எல்லா செயல்களையும் நீங்கள் பிறரிடமிருந்து கற்றுக் கொள்கிறீர்களே அன்றி எதையும் நீங்களாக அறிந்து கொள்ளவில்லை. அறிந்து கொண்டதை நேர்த்தியாக செய்கிறீர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், வாழ்வின் அறிவு என்பது சக உயிரினமிடத்திருந்தே வருகிறது. தலை வாருதலிலிருந்து காலணி அணிவது வரை மற்றவர்கள் சொல்லி தந்துதான் அறிந்து கொள்கிறீர்கள் என்கிற போது வாழ்வின் ஆதாரமாக உள்ள ஆத்ம தாகத்தை, உயிரின் தவிப்பை, தன் இருப்பை அறிவது என்பதை எவரும் அறியாமல் நீங்களாக உணர்ந்து கொள்ள முடியுமா? இதை நானாக தெரிந்து கொள்வேன் என்று இறுமாந்து திரிவது நல்லதா. கடவுள் அறிதல் அல்லது தன்னை அறிதல் என்கிற விஷயத்திற்கு வெகு நிச்சயம் ஒரு வழிகாட்டி தேவைப்படுகிறார். அந்த வழிகாட்டிக்கு குரு என்று பெயர்.

Saturday, June 21, 2014

Balakumaran Thoughts and Unnai Arinthaal Video Speech

#எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு வாங்குகிறோம். அடி விழுவது அத்தனையும் அடி கொடுத்ததன் விளைவு.
- திருப்பூந்துருத்தி.

#தன்னை முன்னிலைப் படுத்தியவருக்குத்தான் வலியும் வேதனையும். தேகத்தை அழித்தவனுக்கு இன்பமுமில்லை. துன்பமுமில்லை. தேகத்தை அழிப்பது என்றால் தேக பாவத்தை அழிப்பது, தன்னை உடலாகக் கண்டதை அழிப்பது.
-கற்பூர வசந்தம்

#உலகின் மிகச்சிறந்த மொழி மௌனம்தான். அந்த மொழி பேசுபவர்களுக்குத்தான், அந்த மொழியின் இலக்கணங்கள் தெரிந்தவர்க்குத்தான், அந்த மொழியில் வளமை மிக்கவர்களுக்குத்தான் கடவுளோடு பேசமுடியும்.
கடவுளோடு பேச மௌனம் ஒரு மொழி. அதுவொரு வழி.
- தோழன்

உன்னை அறிந்தால் -  எழுத்து சித்தர் பாலகுமாரன் 


Friday, June 20, 2014

Balakumaran Thoughts 2

பாலகுமாரன் சிந்தனைகள் 



மனிதர்கள் முக்கியம். நல்ல மனிதர்கள் முக்கியம். பொருட்கள் எங்கும் உண்டு. மனிதர்கள் கிடைப்பது தான் சிரமம். நல்ல மனிதர்கள் அண்மை முக்கியம் - உள்ளம் கவர் கள்வன்


அழுகை என்பது ஒரு சிறிய விடுதலை வடிகால் வடிந்த பிறகு மனசு லேசாகும். வாஸ்தவம். மனசு லேசான பிறகு விரக்தி தான் எஞ்சும். 
நம் கையில் என்ன இருக்கிறது ? எல்லாம் கடவுள் செயல் என்று அயர்ந்து போகும் நடவடிக்கைகளில் முனைப்பு போகும். தீவிரம் அழியும்.

யுத்தம் தீர்மானித்தவர்கள் அழுவதில்லை. போர்க்களம் வந்துவிட்டவர்கள் புலம்புவதில்லை. துக்கத்தை அழுகையாய் மாற்றிக் கரைப்பதை விட உறைய வைத்து நெ
ஞ்சில் நிறுத்திக் கொள்வது உத்தமம். -  உள்ளம் கவர் கள்வன்

# உலகத்தோடு ஆடு . திரும்பத்திரும்ப திரும்ப உள்ளே கிட. எப்போதோ ஏதோ ஒன்று ஜெயிக்கும். நீயோ அல்லது உலகியலோ. எப்போது எது ஜெயிக்கும். பிரம்ம ரகசியம். கர்மா.இதனால்தான் பலனை எதிர்பார்க்காதே என்றார்கள்.- பாலகுமாரன்


Tuesday, April 29, 2014

Balakumaran Thoughts 1

பயமில்லாத மனதில் பதட்டம் இருக்காது. பதட்டமில்லா வாழ்க்கையில் அயர்ச்சி இருக்காது. அயர்ச்சி கவிழ்க்கும் வெறுப்பு இருக்காது. நான் என்னை நேசிப்பேன். என் வாழ்க்கையை நேசிப்பேன். என்னை சுற்றி உள்ளவர்களை நேசிப்பேன்.- இரண்டாவது சூரியன்

.


Sunday, April 20, 2014

மனிதனின் உள்ளம் - திருப்பூந்துருத்தி - பாலகுமாரன்



உணவை பகிர்ந்து கொள்கிறபோது  ஒரு மனிதனின் உள்ளம் மிகச் சுலபமாகத் தெரிந்து விடும்.

சில மனிதர்கள் பங்கு போடுவார்கள்.  தனக்குக் குறைச்சலாய் வைத்துக் கொண்டு பிறருக்குத் தர சிலர் முயற்சி செய்வார்கள்.

எல்லாத்தையும் சாப்பிடு என்று தட்டில் கொட்டுவார்கள்.  இதில் அனைத்துமே பொய் தான் இருக்கும். காரியம் செய்து விட்டு கழிவிரக்கத்தோடு இருக்கும்.

உடுப்பும் படிப்பும், உயர்வும் தாழ்வும், அன்பும் பண்பும் - எல்லாம் பிறரை உத்தேசித்து நடக்கும் விஷயம்.  

Saturday, March 29, 2014

மனத்தின் சக்தி கூடுதலாக என்ன செய்ய வேண்டும் ? - திருப்பூந்துருத்தி

மனத்தின் சக்தி கூடுதலாக என்ன செய்ய வேண்டும் ? - திருப்பூந்துருத்தி
Balakumaran


மனம் அமைதியாக இருக்க வேண்டும். அமைதிக்கு மனதில் பிளவு இல்லாது இருக்க வேண்டும். சரி-தவறு, நல்லது-கெட்டது என்கிற பேதங்கள் அற்று இருத்தல்அவசியம். பேதங்கள் இருக்க வெறுப்பாலும், விருப்பாலும் மனசு அலைக்கழிக்கிறது. படபடப்பாகிறது. படபடப்பு சக்தி விரயம்.

சிலதை வெறுக்கவும் சிலதை விரும்பவும் வாழ்க்கை கற்றுக் கொடுக்கிறது. அவை சாதாரண மனிதர்களுக்கு எந்தச் சலனமும் இல்லாதிருத்தலே நலம்.

சலனத்தில் நல்ல சலனம், கெட்ட சலனம் என்று பிரிவில்லை. எல்லாச் சலனங்களும் தவறு தான்.
சலனமற்றிருத்தலே உத்தமம்.

எண்ணங்கள் தான் மனித வாழ்க்கையைத் திட்டமிடுகின்றன. இது வேண்டும் அது வேண்டும், இப்பொழுது வேண்டும்-இப்பொழுது வேண்டாம் எற்று ஓயாது கட்டளைகள் ஏற்படுத்துகின்றன. இந்தக் கட்டளைகளைச் செயல்படுத்தும் விதமே வாழ்க்கை. 
 

Blogger news

Blogroll

About