Google+ மனத்தின் சக்தி கூடுதலாக என்ன செய்ய வேண்டும் ? - திருப்பூந்துருத்தி | எழுத்தாளர் பாலகுமாரன் சிந்தனைகள் | Balakumaran Thoughts | Balakumaran Books

Pages

Thoughts and Quotes

Writer balakumaran thoughts and quotes

Labels

Saturday, March 29, 2014

மனத்தின் சக்தி கூடுதலாக என்ன செய்ய வேண்டும் ? - திருப்பூந்துருத்தி

மனத்தின் சக்தி கூடுதலாக என்ன செய்ய வேண்டும் ? - திருப்பூந்துருத்தி
Balakumaran


மனம் அமைதியாக இருக்க வேண்டும். அமைதிக்கு மனதில் பிளவு இல்லாது இருக்க வேண்டும். சரி-தவறு, நல்லது-கெட்டது என்கிற பேதங்கள் அற்று இருத்தல்அவசியம். பேதங்கள் இருக்க வெறுப்பாலும், விருப்பாலும் மனசு அலைக்கழிக்கிறது. படபடப்பாகிறது. படபடப்பு சக்தி விரயம்.

சிலதை வெறுக்கவும் சிலதை விரும்பவும் வாழ்க்கை கற்றுக் கொடுக்கிறது. அவை சாதாரண மனிதர்களுக்கு எந்தச் சலனமும் இல்லாதிருத்தலே நலம்.

சலனத்தில் நல்ல சலனம், கெட்ட சலனம் என்று பிரிவில்லை. எல்லாச் சலனங்களும் தவறு தான்.
சலனமற்றிருத்தலே உத்தமம்.

எண்ணங்கள் தான் மனித வாழ்க்கையைத் திட்டமிடுகின்றன. இது வேண்டும் அது வேண்டும், இப்பொழுது வேண்டும்-இப்பொழுது வேண்டாம் எற்று ஓயாது கட்டளைகள் ஏற்படுத்துகின்றன. இந்தக் கட்டளைகளைச் செயல்படுத்தும் விதமே வாழ்க்கை. 

No comments:

Post a Comment

 

Blogger news

Blogroll

About