#எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவு வாங்குகிறோம். அடி விழுவது அத்தனையும் அடி கொடுத்ததன் விளைவு.
- திருப்பூந்துருத்தி.
#தன்னை முன்னிலைப் படுத்தியவருக்குத்தான் வலியும் வேதனையும். தேகத்தை அழித்தவனுக்கு இன்பமுமில்லை. துன்பமுமில்லை. தேகத்தை அழிப்பது என்றால் தேக பாவத்தை அழிப்பது, தன்னை உடலாகக் கண்டதை அழிப்பது.
-கற்பூர வசந்தம்
#உலகின் மிகச்சிறந்த மொழி மௌனம்தான். அந்த மொழி பேசுபவர்களுக்குத்தான், அந்த மொழியின் இலக்கணங்கள் தெரிந்தவர்க்குத்தான், அந்த மொழியில் வளமை மிக்கவர்களுக்குத்தான் கடவுளோடு பேசமுடியும்.
கடவுளோடு பேச மௌனம் ஒரு மொழி. அதுவொரு வழி.
- தோழன்
உன்னை அறிந்தால் - எழுத்து சித்தர் பாலகுமாரன்
No comments:
Post a Comment